என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காயத்தால் டி காக் விலகல்: டெல்லி அணிக்கு பெரிய இழப்பு
Byமாலை மலர்24 March 2017 11:13 AM GMT (Updated: 24 March 2017 11:13 AM GMT)
தென்ஆப்பிரிக்கா அணி வி்க்கெட் கீப்பர் குயிண்டான் டி காக் காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார். இது டெல்லி அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருபவர் குயிண்டான் டி காக். சிறந்த அதிரடி பேட்ஸ்மேனான டி காக் தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார்.
இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் டிரா அல்லது வெற்றி பெற்றால் தென்ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்றிவிடும். இதற்காக தென்ஆப்பிரிக்கா வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் குயிண்டான் டி காக்கிற்கு காயம் ஏற்பட்டது. கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் அவர் அவதிப்பட்டு வருகிறார். நியூசிலாந்திற்கு எதிரான கடைசி போட்டியில் கலந்து கொண்டால் ஐ.பி.எல். தொடரில் கலந்து கொள்ள முடியாது. ஐ.பி.எல். தொடரில் கலந்து கொண்டால் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொள்ள முடியாது என்ற நிலைமை ஏற்பட்டது.
மேலும், நியூசிலாந்திற்கு எதிரான கடைசி போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்றால், ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற இருக்கும் ஐ.பி.எல். தொடரில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.
ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த நியூசிலாந்திற்கு எதிரான நாளைய போட்டியில் அவர் கலந்து கொள்வார் என்று தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இதனால் அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
தொடக்க வீரராக களம் இறங்கும் டி காக் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியிருப்பது எங்களுக்கு பெரிய இழப்பு என்று டெல்லி டேர்டெவில்ஸ் அணி தெரிவித்துள்ளது. இவர் கடந்த ஐ.பி.எல். தொடரில் 13 போட்டியில் 445 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே டெல்லி அணியில் இருந்து தென்ஆப்பிரிக்காவின் டுமினி சொந்த காரணமாக விலகியுள்ளார். தற்போது டி காக் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் டிரா அல்லது வெற்றி பெற்றால் தென்ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்றிவிடும். இதற்காக தென்ஆப்பிரிக்கா வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் குயிண்டான் டி காக்கிற்கு காயம் ஏற்பட்டது. கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் அவர் அவதிப்பட்டு வருகிறார். நியூசிலாந்திற்கு எதிரான கடைசி போட்டியில் கலந்து கொண்டால் ஐ.பி.எல். தொடரில் கலந்து கொள்ள முடியாது. ஐ.பி.எல். தொடரில் கலந்து கொண்டால் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொள்ள முடியாது என்ற நிலைமை ஏற்பட்டது.
மேலும், நியூசிலாந்திற்கு எதிரான கடைசி போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்றால், ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற இருக்கும் ஐ.பி.எல். தொடரில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.
ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த நியூசிலாந்திற்கு எதிரான நாளைய போட்டியில் அவர் கலந்து கொள்வார் என்று தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இதனால் அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
தொடக்க வீரராக களம் இறங்கும் டி காக் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியிருப்பது எங்களுக்கு பெரிய இழப்பு என்று டெல்லி டேர்டெவில்ஸ் அணி தெரிவித்துள்ளது. இவர் கடந்த ஐ.பி.எல். தொடரில் 13 போட்டியில் 445 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே டெல்லி அணியில் இருந்து தென்ஆப்பிரிக்காவின் டுமினி சொந்த காரணமாக விலகியுள்ளார். தற்போது டி காக் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X