என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காயத்தில் இருந்து மீளாத கோலி: ஸ்ரேயாஸ் அய்யர் அழைப்பு
Byமாலை மலர்24 March 2017 4:39 AM GMT (Updated: 24 March 2017 4:39 AM GMT)
விராட் கோலி தொடர்ந்து விளையாடும் போது காயத்தன்மை மேலும் மோசமடைந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மும்பையை சேர்ந்த பேட்ஸ்மேன் 22 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் அணிக்கு கூடுதலாக அழைக்கப்பட்டுள்ளார்.
இந்திய கேப்டன் விராட் கோலி 3-வது டெஸ்டின் போது, ‘பவுண்டரி’ நோக்கி ஓடிய பந்தை பாய்ந்து விழுந்து தடுத்த போது வலது தோள்பட்டையில் காயமடைந்தார். அந்த காயம் முழுமையாக சீராகவில்லை. தோள்பட்டையில் போடப்பட்ட ‘பேண்டேஜ்’ இன்னும் அகற்றப்படவில்லை. நேற்று மைதானத்திற்கு வந்த விராட் கோலி பேட்டிங் வலைபயிற்சி எதிலும் ஈடுபடவில்லை. சிறிது நேரம் பந்தை தூக்கி எறிந்து பீல்டிங் பயிற்சி மட்டும் செய்தார்.
தரம்சாலாவில் பயிற்சியின் போது பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக்கிடம் ஆலோசனை பெறுகிறார், விராட் கோலி.
அவர் தொடர்ந்து விளையாடும் போது காயத்தன்மை மேலும் மோசமடைந்து விடக்கூடாது என்ற கவலையும் அணி நிர்வாகத்துக்கு உள்ளது. இதை கருத்தில் கொண்டு மும்பையை சேர்ந்த பேட்ஸ்மேன் 22 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் அணிக்கு கூடுதலாக அழைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ அணிக்காக களம் இறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 202 ரன்கள் விளாசியது நினைவு கூரத்தக்கது. மாற்று வீரர் அழைக்கப்பட்டிருப்பதால், கடைசி நேரத்தில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
தரம்சாலாவில் பயிற்சியின் போது பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக்கிடம் ஆலோசனை பெறுகிறார், விராட் கோலி.
அவர் தொடர்ந்து விளையாடும் போது காயத்தன்மை மேலும் மோசமடைந்து விடக்கூடாது என்ற கவலையும் அணி நிர்வாகத்துக்கு உள்ளது. இதை கருத்தில் கொண்டு மும்பையை சேர்ந்த பேட்ஸ்மேன் 22 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் அணிக்கு கூடுதலாக அழைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ அணிக்காக களம் இறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 202 ரன்கள் விளாசியது நினைவு கூரத்தக்கது. மாற்று வீரர் அழைக்கப்பட்டிருப்பதால், கடைசி நேரத்தில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X