search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.சி.சி. தலைவராக ஷசாங் மனோகர் நீடிக்க வலியுறுத்தல்
    X

    ஐ.சி.சி. தலைவராக ஷசாங் மனோகர் நீடிக்க வலியுறுத்தல்

    ஐ.சி.சி. தலைவராக ஷசாங் மனோகர் ஜூன் மாதம் வரை நீடிக்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட சில நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் வலியுறுத்தி உள்ளன.
    ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) சேர்மன் பதவியில் இருந்து ஷசாங் மனோகர் சமீபத்தில் விலகினார். இதனால் எந்த நேரத்திலும் புதிய ஐ.சி.சி. தலைவர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே ஷசாங் மனோகர் ஜூன் மாதம் வரை ஐ.சி.சி. தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் ஜூன் மாதம் நடைபெறும் ஐ.சி.சி. வருடாந்திர கூட்டம் வரை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன.

    மேலும் சிங்கப்பூரும் இதை வலியுறுத்தி உள்ளது.
    Next Story
    ×