search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்போது உத்வேகம் எங்கள் அணியிடம் உள்ளது: ஸ்டீவன் சுமித்
    X

    தற்போது உத்வேகம் எங்கள் அணியிடம் உள்ளது: ஸ்டீவன் சுமித்

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே ராஞ்சியில் நடந்த 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. இந்த ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    ராஞ்சி :

    ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

    ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் கருத்து தெரிவிக்கையில், ‘தற்போது உத்வேகம் எங்கள் அணியிடம் தான் உள்ளது. இந்த போட்டியில் எங்கள் அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றி பெற இயலாமல் போனது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்.



    ராஞ்சி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்து இருப்பதன் மூலம் கடைசி டெஸ்ட் போட்டி மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்ததாக இருக்கும். இன்றையை (நேற்று) ஆட்டத்தில் விக்கெட்டை இழக்காமல் விளையாட வேண்டும் என்று முடிவு செய்து களம் கண்டோம்.

    ஹேன்ட்ஸ்கோம்ப், ஷான் மார்ஷ் ஆகியோர் எங்களது திட்டத்தை களத்தில் அருமையாக செயல்படுத்தினார்கள். முதல் இன்னிங்சில் இன்னும் 100 ரன்கள் கூடுதலாக எடுத்து இருந்தால் நாங்கள் வலுவான நிலையில் இருந்து இருப்போம்’ என்று தெரிவித்தார்.
    Next Story
    ×