search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிக சதம் அடித்த 2-வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார் சகா
    X

    அதிக சதம் அடித்த 2-வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார் சகா

    ராஞ்சி போட்டியில் இன்று சதம் அடித்ததன் மூலம் அதிக சதங்கள் அடித்த 2-வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சகா. முதல் இடத்தில் டோனி உள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 451 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் எடுத்திருந்தது.

    213 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கும்போது களம் இறங்கிய சகா, புஜாராவுடன் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்று இரண்டு செசன் முழுவதும் பேட்டிங் செய்த அவர் 233 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 117 ரன்கள் குவித்தார். இது அவருக்கு 3-வது சதமாகும். புஜாராவுடன் இணைந்து சகா 7-வது விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தார்.



    இதன்மூலம் அதிக சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் வரிசையில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் சாதனைக் கேப்டன் டோனி 6 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். பி.குந்தேரன் மற்டறும் கிர்மானி ஆகியோர் 2 சதங்களுடன் 3-வது இடத்தில் உள்ளனர்.
    Next Story
    ×