என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டோனியின் செல்போன்கள் திருட்டு: டெல்லி போலீசார் வழக்கு
Byமாலை மலர்19 March 2017 7:56 AM GMT (Updated: 19 March 2017 7:56 AM GMT)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் தீவிபத்து நடந்தபோது அவரது 3 செல்போன்கள் திருடு போனது தொடர்ந்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் டோனி. டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் விளையாடி வருகிறார். கேப்டன் பதவியில் இருந்து ஏற்கனவே அவர் விலகி விட்டார்.
டோனி விஜய் ஹசாரே ஒருநாள் பேட்டியில் தனது சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் அணியில் விளையாடினார்.
டோனியின் ஜார்க்கண்ட் அணி நேற்று முன்தினம் டெல்லியில் தங்கி இருந்த துவரகா ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. டோனி மற்றும் ஜார்க்கண்ட் வீரர்கள் 7-வது தளத்தில் இருந்தனர். தீ விபத்தை தொடர்ந்து வீரர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக அரையிறுதி ஆட்டம் நேற்று தள்ளி வைக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் ஜார்கண்ட் அணி பெங்காலிடம் தோற்றது.
இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட ஓட்டலில் டோனி தங்கி இருந்த போது அவரது 3 செல்போன்கள் மாயமாகி இருந்தது. அவரது செல்போன்களை யாரோ திருடி சென்றுவிட்டனர்.
தனது 3 செல்போன்கள் திருட்டு போனது தொடர்பாக டெல்லி போலீசில் டோனி புகார் கொடுத்து உள்ளார்.
இது தொடர்பாக போலீசார் கூறும்போது:-
டோனி ஓட்டல் அறையில் இருந்து காலை உணவு சாப்பிட கீழே சென்றுள்ளார். அப்போது அவரது 3 செல்போன்கள் திருடு போய் உள்ளது என்றனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டோனியின் செல்போன் திருட்டு போனது தொடர்பாக சிலரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் டோனி. டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் விளையாடி வருகிறார். கேப்டன் பதவியில் இருந்து ஏற்கனவே அவர் விலகி விட்டார்.
டோனி விஜய் ஹசாரே ஒருநாள் பேட்டியில் தனது சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் அணியில் விளையாடினார்.
டோனியின் ஜார்க்கண்ட் அணி நேற்று முன்தினம் டெல்லியில் தங்கி இருந்த துவரகா ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. டோனி மற்றும் ஜார்க்கண்ட் வீரர்கள் 7-வது தளத்தில் இருந்தனர். தீ விபத்தை தொடர்ந்து வீரர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக அரையிறுதி ஆட்டம் நேற்று தள்ளி வைக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் ஜார்கண்ட் அணி பெங்காலிடம் தோற்றது.
இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட ஓட்டலில் டோனி தங்கி இருந்த போது அவரது 3 செல்போன்கள் மாயமாகி இருந்தது. அவரது செல்போன்களை யாரோ திருடி சென்றுவிட்டனர்.
தனது 3 செல்போன்கள் திருட்டு போனது தொடர்பாக டெல்லி போலீசில் டோனி புகார் கொடுத்து உள்ளார்.
இது தொடர்பாக போலீசார் கூறும்போது:-
டோனி ஓட்டல் அறையில் இருந்து காலை உணவு சாப்பிட கீழே சென்றுள்ளார். அப்போது அவரது 3 செல்போன்கள் திருடு போய் உள்ளது என்றனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டோனியின் செல்போன் திருட்டு போனது தொடர்பாக சிலரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X