search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஞ்சி டெஸ்ட் போட்டி: சத்தீஸ்வர் புஜாரா அரைசதம்
    X

    ராஞ்சி டெஸ்ட் போட்டி: சத்தீஸ்வர் புஜாரா அரைசதம்

    ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் சத்தீஸ்வர் புஜாரா அரைசதம் கடந்தார்.
    ராஞ்சி:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலியா அணி 451 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் 178 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்தியா சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின் இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது.

    மூன்றாம் நாளான இன்று முரளி விஜய்-புஜாரா ஜோடி ஆட்டத்தை துவங்கியது. பொறுப்பாக ஆடிய முரளி விஜய் ஒகேஃப் பந்துவீச்சில் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.



    இதைத் தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் கேப்டன் விராட் கோலி இணைந்தார். இந்த நிலையில் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா 7 பவுண்டரிகளுடன் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாரா அடித்த 15-வது  அரைசதம் ஆகும்.

    கே.எல்.ராகுல், முரளி விஜய், புஜாரா ஆகிய 3 இந்திய வீரர்களும் ராஞ்சி டெஸ்ட் போட்டியில் அரைசதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×