search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் ஜிதுராய் புதிய உலக சாதனை
    X

    துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் ஜிதுராய் புதிய உலக சாதனை

    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீரர் ஜிதுராய் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
    புது டெல்லி:

    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இப்போட்டியில் இந்தியா ஏற்கனவே தங்கம், வெள்ளி, வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை வென்றுள்ளது.



    இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தங்கம், வெள்ளி என மேலும் 2 பதக்கங்களை வென்றது. 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஜிதுராய் தங்கப் பதக்கத்தையும், அமன்பிரீத் சிங் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.
    (இதன் மூலம் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது).

    மேலும், 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் 230.1 புள்ளிகள் பெற்று இந்திய வீரர் ஜிதுராய் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
    Next Story
    ×