search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேட்டிங் திறமையை விமர்சித்த ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த கே.எல்.ராகுல்
    X

    பேட்டிங் திறமையை விமர்சித்த ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த கே.எல்.ராகுல்

    பேட்டிங் திறமை குறித்து டுவிட்டரில் தன்னை விமர்சித்த ரசிகருக்கு கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுல் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
    பெங்களூர்:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீர்ராகக் களமிறங்கிய லோகேஷ் ராகுல் முதல் இன்னிங்சில் 64 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார். ஆனால், 2-வது இன்னிங்சில் 10 ரன்கள் எடுத்த நிலையில் லயன் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். ராகுல் வெளியேறியதைத் தொடர்ந்து இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.

    இதனால், ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் டுவிட்டரில் தனது ஆட்டம் குறித்து விமர்சித்த ரசிகருக்கு, இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரரும், உலகின் முன்னணி பவுலர்களில் ஒருவருமான அஸ்வின் ரவிச்சந்திரன் டுவிட்டரில் ராகுலைப் பின் தொடர்கிறார். இது குறித்து டுவிட் செய்த ராகுல் “இந்திய கிரிக்கெட் முன்னணி வீரர் அஸ்வின் என்னைப் பின் தொடர்கிறார். என்ன ஒரு அற்புதமான நாள்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.



    ராகுலின் இந்த டுவீட்டுக்கு கருத்து தெரிவித்த ரசிகர் ஒருவர் “அனைத்தையும் மறந்துவிட்டு ரன் குவிப்பில் கவனம் செலுத்துங்கள்” என தெரிவிக்க, பதிலுக்கு ராகுல் “இங்கு வந்து எனக்கு சொல்லிக் கொடுங்கள் சகோதரரே. ரன்கள் குவிப்பது எப்படி என உங்களுக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியும்” என பதிலடி கொடுத்துள்ளார்.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 4-ந்தேதி பெங்களூருவில் தொடங்குகிறது.
    Next Story
    ×