search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்களுக்கான 75 கிலோ உடல் எடைப்பிரிவில் கரிமா சவுத்ரி, எதிராளியை மடக்குகிறார்.
    X
    பெண்களுக்கான 75 கிலோ உடல் எடைப்பிரிவில் கரிமா சவுத்ரி, எதிராளியை மடக்குகிறார்.

    தேசிய ஜூடோ போட்டி: அகில இந்திய போலீஸ் அணி சாம்பியன்

    நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் தேசிய சீனியர் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் அகில இந்திய போலீஸ் கட்டுப்பாட்டு வாரிய அணி தனதாக்கியது.
    சென்னை :

    தமிழ்நாடு ஜூடோ சங்கம் சார்பில் தேசிய சீனியர் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 2 நாட்கள் நடந்தது. இந்த போட்டியில் 34 அணிகளை சேர்ந்த 600 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 75 கிலோ உடல் எடைப்பிரிவில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை கரிமா சவுத்ரி தங்கப்பதக்கம் வென்றார். இதன் ஆண்கள் பிரிவில் பஞ்சாப் அணியும், பெண்கள் பிரிவில் அகில இந்திய போலீஸ் கட்டுப்பாட்டு வாரிய அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.



    ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் அகில இந்திய போலீஸ் கட்டுப்பாட்டு வாரிய அணி தனதாக்கியது. பஞ்சாப் அணி 2-வது இடம் பெற்றது. சிறந்த வீரராக ஜஸ்லீன் சிங் சைனியும் (பஞ்சாப்), சிறந்த வீராங்கனையாக துலிகா மானும் (டெல்லி) தேர்வு செய்யப்பட்டனர்.

    Next Story
    ×