search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது ஒருநாள்: நியூசி.யை 112 ரன்னில் சுருட்டி தென்ஆப்பிரிக்கா 159 ரன் வித்தியாசத்தில் வெற்றி
    X

    3-வது ஒருநாள்: நியூசி.யை 112 ரன்னில் சுருட்டி தென்ஆப்பிரிக்கா 159 ரன் வித்தியாசத்தில் வெற்றி

    3-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை 112 ரன்னில் சுருட்டி தென்ஆப்பிரிக்கா 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் டி காக் 68 ரன்னு்ம, கேப்டன் டி வில்லியர்ஸ் 85 ரன்னுடனும் எடுத்தனர்.

    பின்னர் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி 112 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கிராண்ட்ஹோம் அவுட்டாகாமல் 34 ரன்கள் எடுத்தார். 7 பேர் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர்.

    தென்ஆப்பிரிக்கா அணியின் ரபாடா, பர்னெல், பெலுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டும், பிரிடோரியஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரநாள் தொடரில் தென்ஆப்பிரிக்கா 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது. 4-வது போட்டி ஹாமில்டனில் மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது.
    Next Story
    ×