என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய மண்ணில் கோலியின் முதல் டக்: 5 முறை டெஸ்டில் டக்அவுட் ஆகியுள்ளார்
Byமாலை மலர்24 Feb 2017 1:29 PM GMT (Updated: 24 Feb 2017 1:29 PM GMT)
தொடர்ந்து நான்கு தொடரில் இரட்டை சதம் அடித்த விராட் கோலி இந்திய மண்ணில் முதல் டக்அவுட் என்ற மோசமான பதிவை பதிவு செய்துள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புனேவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்த போட்டியில் தான் சந்தித்த 2-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். இதன் மூலம் இந்திய மண்ணில் முதல் டக்அவுட்டை பெற்றுள்ளார்.
ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டியில் ஐந்து முறை டக்அவுட் ஆகியுள்ளார். இதற்கு முன் 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற தனது 2-வது டெஸ்ட் போட்டியில் டக்அவுட் ஆனார்.
அதேஆண்டில் டிசம்பர் மாதம் மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 2-வது முறையாக டக்அவுட் ஆனார்.
3-வது முறையாக 2014-ம் ஆண்டு லார்ட்சில் நடைபெற்ற டெஸ்டிலும், 4-வது முறையாக மான்செஸ்டரில் நடைபெற்ற டெஸ்டிலும் டக்அவுட் ஆகியிருந்தார். அதன்பின் சுமார் 3 வருடங்கள் கழித்து தற்போது 5-வது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார்.
தொடர்ந்து நான்கு தொடரில் இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள விராட் கோலிக்கு இன்று டக்அவுட் ஆனது அணி 105 ரன்னில் ஆல்அவுட் ஆக காரணமாகிவிட்டது.
ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டியில் ஐந்து முறை டக்அவுட் ஆகியுள்ளார். இதற்கு முன் 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற தனது 2-வது டெஸ்ட் போட்டியில் டக்அவுட் ஆனார்.
அதேஆண்டில் டிசம்பர் மாதம் மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 2-வது முறையாக டக்அவுட் ஆனார்.
3-வது முறையாக 2014-ம் ஆண்டு லார்ட்சில் நடைபெற்ற டெஸ்டிலும், 4-வது முறையாக மான்செஸ்டரில் நடைபெற்ற டெஸ்டிலும் டக்அவுட் ஆகியிருந்தார். அதன்பின் சுமார் 3 வருடங்கள் கழித்து தற்போது 5-வது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார்.
தொடர்ந்து நான்கு தொடரில் இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள விராட் கோலிக்கு இன்று டக்அவுட் ஆனது அணி 105 ரன்னில் ஆல்அவுட் ஆக காரணமாகிவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X