search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாய் டென்னிஸ்: அரைஇறுதியில் சானியா ஜோடி
    X

    துபாய் டென்னிஸ்: அரைஇறுதியில் சானியா ஜோடி

    துபாயில் நடந்து வரும் டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் பெண்கள் இரட்டையர் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்றார்
    துபாய்:

    டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சானியா மிர்சா, செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் அபிகைல் ஸ்பியர்ஸ் (அமெரிக்கா)- கேதரினா ஸ்ரீபோட்னிக் (சுலோவேனியா) இணையை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

    இந்த ஆட்டம் 1 மணி 18 நிமிடங்கள் நடந்தது. கடந்த வாரம் கத்தார் ஓபன் அரைஇறுதியில் இதே ஜோடியிடம் தான் சானியா- ஸ்டிரிகோவா கூட்டணி தோற்று இருந்தது. அந்த தோல்விக்கு இப்போது வஞ்சம் தீர்த்துக் கொண்டனர்.

    இதன் ஒற்றையர் பிரிவு கால்இறுதியில் அனஸ்டசிஜா செவஸ்தோவா (லாத்வியா) 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் குயாங் வாங்கை (சீனா) வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார். மற்றொரு ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-0, 6-4 என்ற நேர் செட்டில் லாரென் டேவிசை (அமெரிக்கா) தோற்கடித்தார். 
    Next Story
    ×