search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    13 வருடங்களுக்குப்பின் ரெயிலில் பயணம் செய்த டோனி
    X

    13 வருடங்களுக்குப்பின் ரெயிலில் பயணம் செய்த டோனி

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி 13 வருடங்களுக்குப்பின் ரெயிலில் பயணம் செய்துள்ளார்.
    ராஞ்சி:

    வருகின்ற 25-ம் தேதி மாநிலங்களுக்கு இடையிலான விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. 5௦ ஓவர்கள் கொண்ட இந்த போட்டிக்கு ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் டோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

    வழக்கமாக போட்டி நடைபெறும் இடங்களுக்கு தனது ஹம்மர் சொகுசு காரில் பயணம் செய்யும் டோனி, 13 வருடங்களுக்குப்பின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹாதியாவிலிருந்து ஹவுரா வரை சுமார் 13 மணி நேரங்கள் தனது அணி வீரர்களுடன் ரெயிலில் பயணம் செய்துள்ளார்.



    அணி வீரர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள டோனி, இதுகுறித்து கூறுகையில், "13 வருடங்களுக்குப்பின் ஒரு ரெயில் அனுபவம். நீளமான இந்த ரெயில் பயணத்தில் எனது சக வீரர்களுடன் பேசி மகிழ்ந்தேன்'' என தெரிவித்திருக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு முன், இந்திய ரெயில்வே நிர்வாகத்தில் டோனி டிக்கெட் கலெக்டராக வேலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×