என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பணம் முக்கியமல்ல, அனுபவத்திற்காக ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறேன்: போல்ட் சொல்கிறார்
Byமாலை மலர்21 Feb 2017 1:26 PM GMT
ஐ.பி.எல். ஏலத்தில் 5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது பெரிய விஷயமல்ல. இந்த தொடரின் மூலம் கிடைக்கும் அனுபவத்திற்காக விளையாட இருக்கிறேன் என போல்ட் கூறியுள்ளார்.
ஐ.பி.எல். சீசன் 2017-க்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்டை 5 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.
இதற்கு முன் நியூசிலாந்து அணியின் பிராண்டன் மெக்கல்லம் 7.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். இதுதான் நியூசிலாந்து வீரர் ஒருவர் அதிக விலைக்கு ஏலம் போனது. அதன்பின் தற்போது போல்ட் 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
பெரிய தொகைக்கு ஏலம் போனது குறித்து ட்ரென்ட் போல்ட் கூறுகையில் பணத்தை விட, ஐ.பி.எல். தொடர் மூலம் கிடைக்கும் அனுபவம்தான் பெரிய விஷயம் என்று கூறியுள்ளார்.
மேலும் 5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது குறித்து டிரென்ட் போல்ட் கூறுகையில் ‘‘நான் பணத்திற்காக இந்த தொடரில் விளையாட செல்லவில்லை. ஆயிரக்கணக்கான ரசிகர்களிடையே விளையாடும்போது கிடைக்கும் அனுபவத்திற்காக செல்ல இருக்கிறேன். ஏராளமான சர்வதேச வீரர்களுடன் இணைந்து விளையாடவும், அதன்மூலம் தனது ஆட்டத்திறனை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஐ.பி.எல். தொடரில் ஒரு அணியில் நான்கு வீரர்கள்தான் விளையாட முடியும். ஆகவே சில வீரர்கள் வெளியில் இருக்க வேண்டியிருக்கும். கொல்கத்தா அணிக்காக எனது முழுத்திறமையையும் வெளிப்படுத்த காத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
இதற்கு முன் நியூசிலாந்து அணியின் பிராண்டன் மெக்கல்லம் 7.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். இதுதான் நியூசிலாந்து வீரர் ஒருவர் அதிக விலைக்கு ஏலம் போனது. அதன்பின் தற்போது போல்ட் 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
பெரிய தொகைக்கு ஏலம் போனது குறித்து ட்ரென்ட் போல்ட் கூறுகையில் பணத்தை விட, ஐ.பி.எல். தொடர் மூலம் கிடைக்கும் அனுபவம்தான் பெரிய விஷயம் என்று கூறியுள்ளார்.
மேலும் 5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது குறித்து டிரென்ட் போல்ட் கூறுகையில் ‘‘நான் பணத்திற்காக இந்த தொடரில் விளையாட செல்லவில்லை. ஆயிரக்கணக்கான ரசிகர்களிடையே விளையாடும்போது கிடைக்கும் அனுபவத்திற்காக செல்ல இருக்கிறேன். ஏராளமான சர்வதேச வீரர்களுடன் இணைந்து விளையாடவும், அதன்மூலம் தனது ஆட்டத்திறனை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஐ.பி.எல். தொடரில் ஒரு அணியில் நான்கு வீரர்கள்தான் விளையாட முடியும். ஆகவே சில வீரர்கள் வெளியில் இருக்க வேண்டியிருக்கும். கொல்கத்தா அணிக்காக எனது முழுத்திறமையையும் வெளிப்படுத்த காத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X