என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரெயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் காரை ஓட்டிச்சென்ற கிரிக்கெட் வீரர் கைது
Byமாலை மலர்20 Feb 2017 11:47 AM GMT (Updated: 20 Feb 2017 11:47 AM GMT)
மும்பை அந்தேரி ரெயில் நிலையத்தில் பரபரப்பான நேரத்தில் பிளாட்பாரத்தில் காரை ஓட்டிச் சென்ற கிரிக்கெட் வீரர் கைது செய்யப்பட்டார்.
மும்பை:
மகாராஷ்டிராவில் உள்ள பிரபலமான ரெயில்வே நிலையம் அந்தேரி ரெயில் நிலையம். இன்று காலை 7.20 மணியளவில் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் பரபரப்பாக ரெயில் நிலையத்தற்கு வந்தவண்ணம் இருந்தனர். அந்நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கார் ரெயில் நிலையத்திற்குள் வந்தது. அந்த கார் நேராக 1-வது பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்தது. இதனால் மக்கள் குழப்பம் அடைந்தனர். நிலைமையை புரிந்து கொண்ட ரெயில்வே பாதுகாப்பு போலீசார் அந்த காரை மடக்கினார். காரை பறிமுதல் செய்ததுடன், டிரைவரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோதுதான், காரை ஓட்டி வந்தவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் 24 வயது ஹர்மீத் சிங் என்பது தெரியவந்து. அவர் மீது ரெயில்வே போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பை ரஞ்சி அணியில் அறிமுகமான ஹர்மீத் சிங், தற்போது ஜம்மு-காஷ்மீர் அணிக்காக விளையாடி வருகிறார்.
இவர்மீது மேட்ச் பிக்சிங் புகார் எழுப்பப்பட்டது. பி.சி.சி.ஐ.யின் தீவிர விசாரணைக்குப்பின் மேட்ச் பிக்சிங் புகாரில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மகாராஷ்டிராவில் உள்ள பிரபலமான ரெயில்வே நிலையம் அந்தேரி ரெயில் நிலையம். இன்று காலை 7.20 மணியளவில் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் பரபரப்பாக ரெயில் நிலையத்தற்கு வந்தவண்ணம் இருந்தனர். அந்நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கார் ரெயில் நிலையத்திற்குள் வந்தது. அந்த கார் நேராக 1-வது பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்தது. இதனால் மக்கள் குழப்பம் அடைந்தனர். நிலைமையை புரிந்து கொண்ட ரெயில்வே பாதுகாப்பு போலீசார் அந்த காரை மடக்கினார். காரை பறிமுதல் செய்ததுடன், டிரைவரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோதுதான், காரை ஓட்டி வந்தவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் 24 வயது ஹர்மீத் சிங் என்பது தெரியவந்து. அவர் மீது ரெயில்வே போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பை ரஞ்சி அணியில் அறிமுகமான ஹர்மீத் சிங், தற்போது ஜம்மு-காஷ்மீர் அணிக்காக விளையாடி வருகிறார்.
இவர்மீது மேட்ச் பிக்சிங் புகார் எழுப்பப்பட்டது. பி.சி.சி.ஐ.யின் தீவிர விசாரணைக்குப்பின் மேட்ச் பிக்சிங் புகாரில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X