search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல்: புனே அணி கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி அதிரடி நீக்கம்
    X

    ஐ.பி.எல்: புனே அணி கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி அதிரடி நீக்கம்

    ஐ.பி.எல் தொடரில் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். தொடரில் விளையாட சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. சென்னை அணிக்காக விளையாடி வந்த வீரர்கள், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள புனே அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

    சென்னை அணியின் கேப்டன் தோனியை, புனே அணி 12.5 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்தது. அதன்படி சென்ற ஐ.பி.எல். தொடரில் புனே அணியின் கேப்டனாக தோனி செயல்பாட்டார். ஆனால் தோனி தலைமையிலான புனே அணி மோசமாக தோல்வியடைந்தது.

    இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும் வருகின்ற தொடரில் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் அவர் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புனே அணி 7-வது இடத்துக்கு பின் தங்கியதால் தோனி நீக்கம் என தகவல் வெளியாகியுள்ளது. தோனிக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் வருகின்ற ஐ.பி.எல். தொடரில் புனே அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த ஐ.பி.எல் தொடரில் தோனி தலைமையிலான அணி 14 போட்டிகளில் விளையாடி 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×