search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிசிசிஐ ஜெனரல் மானேஜர் ஆர்.பி. ஷா தனது பதவியை ராஜினாமா செய்தார்
    X

    பிசிசிஐ ஜெனரல் மானேஜர் ஆர்.பி. ஷா தனது பதவியை ராஜினாமா செய்தார்

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஜெனரல் மானேஜராக (வணிகம்) இருந்த ஆர்.பி. சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூன்று ஜெனரல் மானேஜரில் ஒருவரான ஆர்.பி. ஷா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். லோதா கமிட்டி வயது வரம்பை நிர்ணயித்துள்ளதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது.

    இது என்னுடைய சொந்த முடிவு என்று கூறியுள்ள ஷா, ராஜினாமா குறித்து கூறுகையில் ‘‘நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளேன். எனக்கு தற்போது 61 வயது ஆகிறது. இதுதான் காரணம். இந்த முடிவை கடந்த அக்டோபர் மாதமே எடுத்துவிட்டேன்.

    நான் புனேவில் வசித்து வருகிறேன். தினந்தோறும் மும்பைக்கு வருவது மிகவும் கடினமாக இருக்கிறது. எந்த அழுத்தமும், நெருக்கடியும் இல்லை. சிஇஓ ராகுல் என்னை தொடர்ந்து பணிபுரிய கேட்டுக்கொண்டார். ஆனால் என்னை விடுவிக்கும்படி அவரிம் கேட்டுக்கொண்டேன்’’ என்றார்.
    Next Story
    ×