என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
Byமாலை மலர்8 Feb 2017 3:55 AM GMT (Updated: 8 Feb 2017 3:55 AM GMT)
இந்தியாவில் நடந்து வரும் பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
புவனேஸ்வர் :
பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் புவனேஸ்வரில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக வில்சன் ஆட்டம் இழக்காமல் 52 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் இக்பால் ஜாபர் 2 விக்கெட்டும், கீதன் பட்டேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இக்பால் ஜாபர் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.
சுக்ராம் மஜ்ஹி 56 ரன்னுடனும், அஜய்குமார் ரெட்டி 72 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 8-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி 7-வது வெற்றியை ருசித்து அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்தது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொள்கிறது.
பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் புவனேஸ்வரில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக வில்சன் ஆட்டம் இழக்காமல் 52 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் இக்பால் ஜாபர் 2 விக்கெட்டும், கீதன் பட்டேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இக்பால் ஜாபர் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.
சுக்ராம் மஜ்ஹி 56 ரன்னுடனும், அஜய்குமார் ரெட்டி 72 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 8-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி 7-வது வெற்றியை ருசித்து அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்தது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொள்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X