search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
    X

    பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி

    இந்தியாவில் நடந்து வரும் பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
    புவனேஸ்வர் :

    பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் புவனேஸ்வரில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக வில்சன் ஆட்டம் இழக்காமல் 52 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் இக்பால் ஜாபர் 2 விக்கெட்டும், கீதன் பட்டேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இக்பால் ஜாபர் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    சுக்ராம் மஜ்ஹி 56 ரன்னுடனும், அஜய்குமார் ரெட்டி 72 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 8-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி 7-வது வெற்றியை ருசித்து அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்தது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொள்கிறது.
    Next Story
    ×