search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புற்றுநோய், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுடன் நேரம் செலவழித்த யுவராஜ்சிங்
    X

    புற்றுநோய், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுடன் நேரம் செலவழித்த யுவராஜ்சிங்

    கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் புற்றுநோய் மற்றும் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் நேரம் செலவழித்துள்ளார்.
    புவனேஸ்வர்:

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் யுவராஜ் சிங் 150 ரன்கள் எடுத்தார். 127 பந்தில் 21 பவுண்டரி, 3 சிக்சருடன் இந்த ரன்னை எட்டினார். இவரது ரன் குவிப்பு இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. கட்டாக்கில் நடந்த இப்போட்டியைத் தொடர்ந்து 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் வருகின்ற 22-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கொல்கத்தாவிற்கு செல்வதற்கு முன், புவனேஸ்வரில் ஆட்டிசம் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் இன்று நேரம் செலவிட்டார்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்த குழந்தைகள் அனைவரையும், தனியார் ஓட்டல் ஒன்றில் சந்தித்த யுவராஜ் அவர்கள் அனைவருடனும் நேரம் செலவிட்டு மகிழ்ந்தார். கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×