search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகள்: சுப்ரீம் கோர்ட்டு நாளை அறிவிப்பு
    X

    கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகள்: சுப்ரீம் கோர்ட்டு நாளை அறிவிப்பு

    இந்திய கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க போகும் புதிய நிர்வாகிகளை சுப்ரீம் கோர்ட்டு நாளை அறிவிக்கிறது. இன்று அறிவிக்கப்படுவதாக இருந்த நிர்வாகிகள் பெயர் விவரம் நாளைக்கு தள்ளிவைத்துள்ளது.
    புதுடெல்லி:

    லோதா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்த தாமதம் செய்து வந்ததால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை பொறுப்புகளில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக நீக்கியது.

    இவர்களுக்கு பதிலாக கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க போகும் புதிய நிர்வாகிகளை சுப்ரீம் கோர்ட்டு நாளை 20-ந்தேதி அறிவிக்கிறது. இன்று அறிவிக்கப்படுவதாக இருந்த நிர்வாகிகள் பெயர் விவரம் நாளைக்கு தள்ளிவைத்துள்ளது.

    புதிய நிர்வாகிகளில் நான் தேர்வு செய்த பெயர்களின் பரிந்துரையை வக்கீல் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிப்பேன் என்று பீகார் கிரிக்கெட் சங்க செயலாளரும், வழக்கு தொடர்ந்தவருமான ஆதித்யா வர்மா கூறியுள்ளர்.
    Next Story
    ×