search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஓபன் சர்வதேச செஸ் போட்டி நாளை தொடங்குகிறது
    X

    சென்னை ஓபன் சர்வதேச செஸ் போட்டி நாளை தொடங்குகிறது

    சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டிகள் பெரியமேட்டில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது.
    சென்னை:

    தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில் டாக்டர் மகாலிங்கம் கோப்பைக்கான 9-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. நேரு ஸ்டேடியத்தின் நியூ மீடியா ஹாலில் நாளை மதியம் 1 மணியளவில் துவக்க விழா நடைபெற உள்ளது.

    விழாவிற்கு தமிழ்நாடு மாநில செஸ் சங்க துணைத்தலைவர் முருகவேல் தலைமை தாங்குகிறார். உலக செஸ் கூட்டமைப்பு துணைத்தலைவர் டி.வி.சுந்தர் தலைமை விருந்தினராகவும், அர்ஜூனா விருது பெற்றவரும் இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டருமான மானுவல் ஆரோன் கவுரவ விருந்தினராகவும் பங்கேற்க உள்ளனர்.

    ஜனவரி 25-ம் தேதி வரை நடைபெற உள்ள இப்போட்டியில் இந்தியா, ரஷியா, உக்ரைன், இத்தாலி, பெல்ஜியம், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள், சர்வதேச மாஸ்டர்கள் கலந்துகொள்கின்றனர். போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.11 லட்சம் ஆகும்.
    Next Story
    ×