search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தரமான இந்திய பந்து வீச்சாளர்கள்தான் சிறந்தவர்கள்: பார்தீவ் பட்டேல்
    X

    தரமான இந்திய பந்து வீச்சாளர்கள்தான் சிறந்தவர்கள்: பார்தீவ் பட்டேல்

    ஆடுகளம் சாதகமில்லாத இடத்திலும் அசத்தி வரும் இந்தியாவின் தரமான பந்து வீச்சாளர்கள்தான் இங்கிலாந்து வீரர்களை விட சிறந்தவர்கள் என்று பார்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்திய ஆடுகளத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் அணியே பெரும்பாலான போட்டிகளில் வெற்றி பெற்ற வரலாறு உண்டு. முதல் இரண்டு மூன்று நாட்கள் ஆடுகளம் பேட்டிங் செய்ய அதிக அளவில் ஒத்துழைக்கும். அதன்பிறகு முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் ஆடுகளம் மாறிவிடும். இதனால் இந்திய ஆடுகளத்தில் 4-வது இன்னிங்சில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம்.

    இந்த தொடரின்போது முதல் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த டெஸ்ட் டிரா ஆனது. 2-வது போட்டியில் இந்தியா டாஸ் வென்றது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

    மொகாலியில் நடைபெற்ற 3-வது போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்றது. இந்த போட்டியில் இங்கிலாந்துக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது. ஆனால், இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி வெற்றியை இந்திய பக்கம் திருப்பி விட்டார்கள்.

    நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய 4 டெஸ்டிலும் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்பட்டது. இந்த டெஸ்டிலும் இங்கிலாந்து அணிதான் டாஸ் வென்றது. இதனால் இங்கிலாந்து வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    அதேபோல் அந்த அணி முதல் இன்னிங்சில் 400 ரன்கள் குவித்தது. ஆடுகளம் ஓரளவிற்கு சுழற்பந்து வீச்சுக்கு எடுபட்டது. இதனால் இந்தியாவிற்கு நெருக்கடிதான் என்று கூறப்பட்டது. ஆனால், முரளி விஜய் மற்றும் புஜாரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்தியா 2-வது நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்றைய ஆட்டத்திற்குப்பின் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பார்தீப் பட்டேல் கூறுகையில் ‘‘இதைவிட மோசமான மேற்பரப்பை கொண்ட ஆடுகளத்தில் நம்முடைய தரமான பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறந்தவர்கள். நம்முடைய சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துகளோடு புரட்சி செய்து, இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் என்ன செய்தார்களோ? அதைவிட சிறப்பான வகையில் பந்து வீசினார்கள். ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு உதவி செய்யும்போது நமது பந்து வீச்சாளர்கள் காற்றைப் பயன்படுத்தி பந்தை சிறந்த வகையில் டர்ன் செய்கிறார்கள். இதனால் தரமான பந்து வீச்சாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் கட்டாயம் வித்தியாசம் உள்ளது.

    மொகாலியில் நடைபெற்ற கடந்த போட்டியில் இங்கிலாந்துக்கு நாம் பந்து வீசும்போது, அவர்கள் நமக்கும் பந்து வீசும்போதும் பார்த்தோம் என்றால், பாரம்பரியமான நம்முடைய பந்து வீச்சாளர்கள் மாறுபடுவார்கள். அஸ்வின், ஜடேஜா மற்றும் ஜயந்த் யாதவ் சிறந்த முறையில் பந்து வீசினார்கள். அதை வைத்து பார்க்கும்போது அவர்கள் சிறந்தவர்கள்.
    Next Story
    ×