search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோல்ப் போட்டியில் இந்திய வீரர் முகேஷ்குமார் சாதனை
    X

    கோல்ப் போட்டியில் இந்திய வீரர் முகேஷ்குமார் சாதனை

    டெல்லியில் நடந்த பானசோனிக் ஓபன் சர்வதேச கோல்ப் போட்டியில் இந்திய வீரர் முகேஷ்குமார் நேற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினார்.
    புதுடெல்லி :

    டெல்லியில் நடந்த பானசோனிக் ஓபன் சர்வதேச கோல்ப் போட்டியில் இந்திய வீரர் முகேஷ்குமார் நேற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினார். ஆசிய டூர் வகை பட்டத்தை அவர் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

    இதன் மூலம் ஆசிய டூர் பட்டத்தை அதிக வயதில் வென்ற வீரர் என்ற அரிய சிறப்பை தட்டிச்சென்ற 51 வயதான முகேஷ்குமாருக்கு ரூ.49 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.

    மத்தியபிரதேசத்தை சேர்ந்த முகேஷ்குமார் கூறும் போது, ‘என்னை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இந்த மகுடத்துக்காக 32 ஆண்டுகள் காத்து இருந்திருக்கிறேன்’ என்றார். இந்தியாவின் ஜோதி ராந்தவா, ரஷித் கான் ஆகியோர் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டனர்.
    Next Story
    ×