என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா - புனே ஆட்டம் டிரா
Byமாலை மலர்2 Dec 2016 11:43 PM GMT (Updated: 2 Dec 2016 11:43 PM GMT)
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா - புனே அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது.
கொல்கத்தா:
3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த 54-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டீ கொல்கத்தா - புனே சிட்டி அணிகள் சந்தித்தன. களத்தில் ஏறக்குறைய சரிசம ஆதிக்கத்தை செலுத்திய இவ்விரு அணி வீரர்களால் கடைசி நிமிடம் வரை பந்தை வலைக்குள் அனுப்ப முடியவில்லை. இலக்கை நோக்கி தலா 4 ஷாட்கள் அடிக்கப்பட்ட போதிலும், ஒன்று கூட கோல் கீப்பரை தாண்டவில்லை. முடிவில் இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது.
இன்னும் 2 லீக் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் மும்பை (22 புள்ளி), டெல்லி (20 புள்ளி), கொல்கத்தா (20) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்டன. அரைஇறுதிக்கு தேர்வாகும் மற்றொரு அணி கவுகாத்தியா அல்லது கேரளா பிளாஸ்டர்சா என்பது நாளை தெரிந்து விடும். இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் நடக்கும் லீக் ஆட்டத்தில் அரைஇறுதியை உறுதி செய்து விட்ட மும்பை சிட்டி -டெல்லி டைனமோஸ் அணிகள் மோதுகின்றன.
இதற்கிடையே, இந்த சீசனுக்கான இறுதிப்போட்டி கேரள மாநிலம் கொச்சியில் (டிச.18) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்து மோகம் கொண்ட கேரள ரசிகர்கள் மைதானத்திற்கும் அதிக அளவில் படையெடுக்கிறார்கள். இத்தகைய வரவேற்பை கருத்தில் கொண்டு கொச்சிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த 54-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டீ கொல்கத்தா - புனே சிட்டி அணிகள் சந்தித்தன. களத்தில் ஏறக்குறைய சரிசம ஆதிக்கத்தை செலுத்திய இவ்விரு அணி வீரர்களால் கடைசி நிமிடம் வரை பந்தை வலைக்குள் அனுப்ப முடியவில்லை. இலக்கை நோக்கி தலா 4 ஷாட்கள் அடிக்கப்பட்ட போதிலும், ஒன்று கூட கோல் கீப்பரை தாண்டவில்லை. முடிவில் இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது.
இன்னும் 2 லீக் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் மும்பை (22 புள்ளி), டெல்லி (20 புள்ளி), கொல்கத்தா (20) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்டன. அரைஇறுதிக்கு தேர்வாகும் மற்றொரு அணி கவுகாத்தியா அல்லது கேரளா பிளாஸ்டர்சா என்பது நாளை தெரிந்து விடும். இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் நடக்கும் லீக் ஆட்டத்தில் அரைஇறுதியை உறுதி செய்து விட்ட மும்பை சிட்டி -டெல்லி டைனமோஸ் அணிகள் மோதுகின்றன.
இதற்கிடையே, இந்த சீசனுக்கான இறுதிப்போட்டி கேரள மாநிலம் கொச்சியில் (டிச.18) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்து மோகம் கொண்ட கேரள ரசிகர்கள் மைதானத்திற்கும் அதிக அளவில் படையெடுக்கிறார்கள். இத்தகைய வரவேற்பை கருத்தில் கொண்டு கொச்சிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X