என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பை டெஸ்ட்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச டிக்கெட்
Byமாலை மலர்2 Dec 2016 2:38 PM GMT (Updated: 2 Dec 2016 2:38 PM GMT)
மும்பையில் 8-ந்தேதி தொடங்கும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கான 4-வது டெஸ்ட் போட்டியை காண மாணவ- மாணவிகளுக்கு இலவச பாஸ்கள் வழங்கப்பட உள்ளது.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 4-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் 8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.
இதற்கான டிக்கெட் விற்பனை நடைபெற்று வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச டிக்கெட்டுக்கள் வழங்கப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ‘‘பள்ளி அல்லது கல்லூரி முதல்வரிடம் கடிதம் வாங்கி வரும் மாணவ - மாணவிகளுக்கு முதலில் வருபவர்களுக்கு முதல் வாய்ப்பு என்ற அடிப்படையில் டிக்கெட்டுக்கள் வழங்கப்படும். ஒரு பள்ளி/கல்லூரிக்கு அதிகபட்சமாக 15 டிக்கெட்டுக்கள் வழங்கப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், சில ரசிகர்களை தேர்வு செய்து வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்களுடன் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் கடைசியாக 2013-ம் ஆண்டு சச்சினின் பிரியாவிடை டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நடைபெற்றது. அதன்பின் சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து தற்போதுதான் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.
இதற்கான டிக்கெட் விற்பனை நடைபெற்று வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச டிக்கெட்டுக்கள் வழங்கப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ‘‘பள்ளி அல்லது கல்லூரி முதல்வரிடம் கடிதம் வாங்கி வரும் மாணவ - மாணவிகளுக்கு முதலில் வருபவர்களுக்கு முதல் வாய்ப்பு என்ற அடிப்படையில் டிக்கெட்டுக்கள் வழங்கப்படும். ஒரு பள்ளி/கல்லூரிக்கு அதிகபட்சமாக 15 டிக்கெட்டுக்கள் வழங்கப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், சில ரசிகர்களை தேர்வு செய்து வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்களுடன் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் கடைசியாக 2013-ம் ஆண்டு சச்சினின் பிரியாவிடை டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நடைபெற்றது. அதன்பின் சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து தற்போதுதான் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X