search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்காவ் ஓபன்: காஷ்யப் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம் - சமீர் வர்மா அவுட்
    X

    மக்காவ் ஓபன்: காஷ்யப் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம் - சமீர் வர்மா அவுட்

    மக்காவ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பருபள்ளி காஷ்யப் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
    மக்காவ்:

    சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதியான மக்காவ் பிராந்தியத்தில், மக்காவ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்றைய ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பருபள்ளி காஷ்யப், சீன தைபே வீரர் சுன் வெய் சென்னுடன் விளையாடினார். இதில், 21-19, 21-8 என்ற செட்கணக்கில் காஷ்யப் எளிதாக வெற்றி பெற்றார். இதன்மூலம், காஷ்யப் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு இந்திய வீரர் சமீர் வர்மா, இந்தோனேசியாவின் பங்கிஸ்துவை எதிர்த்து விளையாடினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 18-21, 13-21 என்ற செட்கணக்கில் சமீர் வர்மா போராடி தோல்வியடைந்தார். ஆடவர் இரட்டையர் பிரிவில் அனு அத்ரி-சுமீத் ரெட்டி, இந்தோனேசியாவனி சான் ஆலன் யுன் லங்-லி குயென் ஹான் ஜோடியை 21-11, 17-21, 21-9 என்ற செட்கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    சாய் பிரனீத், சீனாவின் சன் பெய்ஜியபாங்கை எதிர்த்து விளையாட உள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் இந்தோனேசியாவின் ஹன்னா ரமாதினியுடன் மோதுகிறார்.
    Next Story
    ×