என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
18 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கி போட்டி சென்னையில் 5-ந்தேதி தொடக்கம்
Byமாலை மலர்30 Nov 2016 7:45 AM GMT (Updated: 30 Nov 2016 7:46 AM GMT)
18 அணிகள் பங்கேற்கும் மாநில அளவிலான ஆக்கி போட்டி டிசம்பர் 5-ந்தேதி சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
சென்னை:
வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் 2-வது டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு மாநில அளவிலான ஆண்கள் ஆக்கிப்போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.
இந்தப்போட்டி டிசம்பர் 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 7 நாட்கள் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இதில் ஐ.சி.எப், தெற்கு ரெயில்வே, இந்தியன் வங்கி, மத்திய கலால் வரி, ஐ.ஒ.பி., வருமானவரி, ஏ.ஜி.எஸ், லயோலா, ஸ்டேட் பாங்கி, வேலூர் லெவன், பிரண்ட்ஸ் ஆக்கி கிளப், வெஸ்லி ஆக்கி கிளப், குன்னூர் லெவன் உள்பட 18 அணிகள் பங்கேற்கின்றன.
நாக்அவுட் முறையில் இந்தப்போட்டி நடக்கிறது. இறுதிப்போட்டி 11-ந்தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
இந்தப்போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2.70 லட்சம் ஆகும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.1 லட்சமும், 2-வது இடத்துக்கு 70 ஆயிரமும், 3-வது இடத்துக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.
இதுதவிர சிறந்த வீரர்கள் 4 பேருக்கு தலா 10 ஆயிரமும், தொடர் நாயகனுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும். முன்னாள் எம்.எல்.ஏ. நீலகண்டன் இந்தப்போட்டியை தொடங்கி வைக்கிறார்.
மேற்கண்ட தகவலை போட்டி அமைப்புக்குழு செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் 2-வது டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு மாநில அளவிலான ஆண்கள் ஆக்கிப்போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.
இந்தப்போட்டி டிசம்பர் 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 7 நாட்கள் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இதில் ஐ.சி.எப், தெற்கு ரெயில்வே, இந்தியன் வங்கி, மத்திய கலால் வரி, ஐ.ஒ.பி., வருமானவரி, ஏ.ஜி.எஸ், லயோலா, ஸ்டேட் பாங்கி, வேலூர் லெவன், பிரண்ட்ஸ் ஆக்கி கிளப், வெஸ்லி ஆக்கி கிளப், குன்னூர் லெவன் உள்பட 18 அணிகள் பங்கேற்கின்றன.
நாக்அவுட் முறையில் இந்தப்போட்டி நடக்கிறது. இறுதிப்போட்டி 11-ந்தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
இந்தப்போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2.70 லட்சம் ஆகும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.1 லட்சமும், 2-வது இடத்துக்கு 70 ஆயிரமும், 3-வது இடத்துக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.
இதுதவிர சிறந்த வீரர்கள் 4 பேருக்கு தலா 10 ஆயிரமும், தொடர் நாயகனுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும். முன்னாள் எம்.எல்.ஏ. நீலகண்டன் இந்தப்போட்டியை தொடங்கி வைக்கிறார்.
மேற்கண்ட தகவலை போட்டி அமைப்புக்குழு செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X