search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நானும் மெஸ்சியும் சிறந்த நண்பர்கள் இல்லை: கிறிஸ்டியானோ ரொனால்டோ
    X

    நானும் மெஸ்சியும் சிறந்த நண்பர்கள் இல்லை: கிறிஸ்டியானோ ரொனால்டோ

    பார்சிலோனா அணியின் தலைசிறந்த வீரரான மெஸ்சி எனக்கு சிறந்த நண்பர் இல்லை என்று ரியல் மாட்ரிட்டின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார்.
    ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கால்பந்து கிளப்புகளில் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் ஆகிய இரண்டும் குறிப்பிடத்தகுந்தவை. இந்த நூற்றாண்டின் சிறந்த வீரர்களாக கருதப்படும் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி பார்சிலோனா அணிக்காகவும், போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடி வருகிறார்கள்.

    ஸ்பெயின் லீக் தொடரான ‘லா லிகா’ மற்றும் கிளப் அணிகளுக்கிடைலான ‘ஐரோப்பிய கால்பந்து லீக்’ ஆகியவற்றில் யார் அதிக கோல்கள் அடிக்கிறார்கள் என்பதில் இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும். கடந்த 8 ஆண்டுகளாக இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

    பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறும்போது அந்த போட்டி மெஸ்சி - ரொனால்டோவிற்கு இடையிலான போட்டி என்றே கருதப்படும். சில சமயங்களில் இருவரும் ஒருவருக்கொருவர் எதிரி என்ற வகையிலும் சித்தரிக்கப்படும்.

    ஐரோப்பிய நாடுகளில் சிறந்த வீரராக திகழும் வீரருக்கு ‘தி பலோன் டி'ஆர்’ (the Ballon d'Or - தங்க பந்து) என்ற விருது வழங்கப்படும். இந்த விருதிற்காக கடந்த 8 ஆண்டுகளாக இவர்கள் இருவரும்தான் மோதியுள்ளனர்.

    இந்த ஆண்டுக்கான விருதுக்கும் இருவரது பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இவர்கள் இருவர் குறித்தும் விவாதம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் இல்லை என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார். இதுகுறித்து ரொனால்டோ மேலும் கூறுகையில் ‘‘எனக்கும் மெஸ்சிக்கும் இடையில் பெரிய புரிந்துணர்வு மரியாதை உள்ளது. மீடியாக்கள் எங்கள் இருவருக்கும் இடையில் பெரிய பகை உள்ளது போல் சித்தரிக்கின்றன. ஆனால், அப்படி இல்லை. அவர் எனக்கு சிறந்த நண்பர் கிடையாது. ஆனாலும், எங்களுக்குள் பரஸ்பர மரியாதை உள்ளது’’ என்றார்.
    Next Story
    ×