என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்து-வங்காளதேசம் மோதும் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
Byமாலை மலர்28 Oct 2016 3:04 AM GMT (Updated: 28 Oct 2016 3:05 AM GMT)
இங்கிலாந்து-வங்காளதேசம் மோதும் 2-வது டெஸ்ட் மிர்புரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
டாக்கா :
வங்காளதேசத்துக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. சிட்டகாங்கில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி கண்டது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் உள்ள மிர்புரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை டெஸ்டில் வெற்றி பெறாத வங்காளதேச அணி, அந்த நிலைமையை மாற்றி வரலாறு படைக்கும் முனைப்புடன் ஆயத்தமாகியுள்ளது.
அதே சமயம் இந்த டெஸ்டிலும் வாகை சூடி, நல்ல நம்பிக்கையுடன் அடுத்து வரும் இந்தியப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற வேட்கையில் இங்கிலாந்து வீரர்கள் இருக்கிறார்கள். இங்கிலாந்து அணியில் இரு மாற்றம் செய்யப்படுகிறது. காரெத் பேட்டிக்கு பதிலாக 24 வயதான இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஜாபர் அன்சாரி அறிமுக வீரராக அடியெடுத்து வைக்கிறார். ஸ்டூவர்ட் பிராட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஸ்டீவன் பின் இடம் பெறுகிறார்.
இந்த டெஸ்ட் மழையால் பாதிக்கப்படலாம். டாக்காவில் நேற்று கனமழை பெய்தது. இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
வங்காளதேசத்துக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. சிட்டகாங்கில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி கண்டது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் உள்ள மிர்புரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை டெஸ்டில் வெற்றி பெறாத வங்காளதேச அணி, அந்த நிலைமையை மாற்றி வரலாறு படைக்கும் முனைப்புடன் ஆயத்தமாகியுள்ளது.
அதே சமயம் இந்த டெஸ்டிலும் வாகை சூடி, நல்ல நம்பிக்கையுடன் அடுத்து வரும் இந்தியப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற வேட்கையில் இங்கிலாந்து வீரர்கள் இருக்கிறார்கள். இங்கிலாந்து அணியில் இரு மாற்றம் செய்யப்படுகிறது. காரெத் பேட்டிக்கு பதிலாக 24 வயதான இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஜாபர் அன்சாரி அறிமுக வீரராக அடியெடுத்து வைக்கிறார். ஸ்டூவர்ட் பிராட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஸ்டீவன் பின் இடம் பெறுகிறார்.
இந்த டெஸ்ட் மழையால் பாதிக்கப்படலாம். டாக்காவில் நேற்று கனமழை பெய்தது. இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X