என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4-வது ஒருநாள் போட்டியில் குப்தில் சிறப்பான ஆட்டம்: இந்தியாவின் வெற்றிக்கு 261 ரன்கள் நிர்ணயித்தது நியூசிலாந்து
Byமாலை மலர்26 Oct 2016 11:56 AM GMT (Updated: 26 Oct 2016 11:56 AM GMT)
ராஞ்சியில் நடைபெற்றுவரும் நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு நியூசிலாந்து அணி 261 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
ராஞ்சி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 4-வது ஒருநாள் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பகல்-இரவு ஆட்டமாக இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன், பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி துவக்க வீரர்களாக களமிறங்கிய குப்தில், லாதம் ஆகியோர் நிதானமாக, அதேசமயம் அடிக்க வேண்டிய பந்தை மட்டும் அடித்து ஆடி ரன் சேர்த்தனர். இந்த ஜோடி 96 ரன்கள் சேர்த்த நிலையில், லாதம் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்த குப்தில் 72 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
விக்கெட் சரியாமல் நிதானமாக விளையாடிய வில்லியம்சன் 41 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் ராஸ் டெய்லரும் தன் பங்கினை சிறப்பாக செய்தார். ஆனால், அவர் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். பின்கள வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் சேர்த்தது.
இந்தியா தரப்பில் அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், குல்கர்னி, பாண்டியா, அக்சர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 4-வது ஒருநாள் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பகல்-இரவு ஆட்டமாக இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன், பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி துவக்க வீரர்களாக களமிறங்கிய குப்தில், லாதம் ஆகியோர் நிதானமாக, அதேசமயம் அடிக்க வேண்டிய பந்தை மட்டும் அடித்து ஆடி ரன் சேர்த்தனர். இந்த ஜோடி 96 ரன்கள் சேர்த்த நிலையில், லாதம் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்த குப்தில் 72 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
விக்கெட் சரியாமல் நிதானமாக விளையாடிய வில்லியம்சன் 41 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் ராஸ் டெய்லரும் தன் பங்கினை சிறப்பாக செய்தார். ஆனால், அவர் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். பின்கள வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் சேர்த்தது.
இந்தியா தரப்பில் அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், குல்கர்னி, பாண்டியா, அக்சர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X