search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவிற்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து 0-5 என தோல்வியடையும்: பயப்படுகிறார் மைக்கேல் வாகன்
    X

    இந்தியாவிற்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து 0-5 என தோல்வியடையும்: பயப்படுகிறார் மைக்கேல் வாகன்

    இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 0-5 என ஒயிட்வாஷ் ஆகும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பயப்படுகிறார்.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது வங்காள தேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சிட்டகாங்கில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி போராடி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் மயிரிழையில் அந்த தோல்வியில் இருந்து தப்பியது.

    இதேபோல் இந்தியாவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடினால் 0-5 ஒயிட்வாஷ் தோல்விதான் அடையும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அச்சம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறுகையில் ‘‘வங்காள தேசத்திற்கு எதிராக சிட்டகாங்கில் விளையாடியதுபோல் இங்கிலாந்து அணி இந்தியாவிலும் விளையாடினால், 0-5 என ஒயிட்வாஷ் ஆவது உறுதி. இங்கிலாந்து அதிகமான நேரத்தில் 30 அல்லது 40 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்துள்ளது. இதே சூழ்நிலையில் 40 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இந்தியாவிற்கு எதிராக இழந்துவி்ட்டால், அதன்பின் இங்கிலாந்து அணி குறைந்த ரன்னிற்குள் சுருண்டுவிடும்’’ என்றார்.
    Next Story
    ×