என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்
Byமாலை மலர்23 Oct 2016 4:22 AM GMT (Updated: 23 Oct 2016 4:22 AM GMT)
6 அணிகள் இடையிலான 4-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள குயான்டனில் நடந்து வருகிறது. இன்று இந்திய அணி தனது 3-வது லீக்கில் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
குயான்டன்:
6 அணிகள் இடையிலான 4-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள குயான்டனில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி நேற்று தென்கொரியாவுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. தென் கொரியா தரப்பில் ஜெங் ஜூன்வோவும் (11-வது நிமிடம்), இந்திய தரப்பில் லலித்குமார் உபத்யாயும்(33-வது நிமிடம்) கோல் அடித்தனர்.
இந்திய அணி இன்று தனது 3-வது லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதுகுறித்து இந்திய கேப்டன் ஸ்ரீஜேஷ் கூறும்போது ‘பாகிஸ்தானுடன் விளையாடுகையில் நமது வீரர்களுக்கு இயல்பாகவே நெருக்கடி அதிகரிக்கும். நெருக்கடிக்கு ஆளாகாமல் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தும் படி வீரர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன். சமூக வலைதளங்களை பார்ப்பதை கூட தவிர்க்கும் படி சொல்லி இருக்கிறேன்.
இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் நிறைய உற்சாகத்தை போட்டிக்கு கொண்டு வரும். இந்த ஆட்டத்தில் நாங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்துவோம். குறிப்பாக உயிர் தியாகம் செய்து எல்லையை காக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்க நாங்கள் விரும்பவில்லை’ என்றார். மாலை 4 மணிக்கு நடக்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 4 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
6 அணிகள் இடையிலான 4-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள குயான்டனில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி நேற்று தென்கொரியாவுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. தென் கொரியா தரப்பில் ஜெங் ஜூன்வோவும் (11-வது நிமிடம்), இந்திய தரப்பில் லலித்குமார் உபத்யாயும்(33-வது நிமிடம்) கோல் அடித்தனர்.
இந்திய அணி இன்று தனது 3-வது லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதுகுறித்து இந்திய கேப்டன் ஸ்ரீஜேஷ் கூறும்போது ‘பாகிஸ்தானுடன் விளையாடுகையில் நமது வீரர்களுக்கு இயல்பாகவே நெருக்கடி அதிகரிக்கும். நெருக்கடிக்கு ஆளாகாமல் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தும் படி வீரர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன். சமூக வலைதளங்களை பார்ப்பதை கூட தவிர்க்கும் படி சொல்லி இருக்கிறேன்.
இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் நிறைய உற்சாகத்தை போட்டிக்கு கொண்டு வரும். இந்த ஆட்டத்தில் நாங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்துவோம். குறிப்பாக உயிர் தியாகம் செய்து எல்லையை காக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்க நாங்கள் விரும்பவில்லை’ என்றார். மாலை 4 மணிக்கு நடக்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 4 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X