search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 3-வது இடத்துக்கு முன்னேற்றம்
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 3-வது இடத்துக்கு முன்னேற்றம்

    இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து ஆட்டத்தில் கவுகாத்தி அணியை வீழ்த்தின் மூலம் சென்னை அணி 7 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியது.
    கவுகாத்தி:

    3-வது இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த 18-வது ‘லீக்’ ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-கவுகாத்தி அணிகள் மோதின. 59-வது நிமிடத்தில் சென்னை வீரர் டேவிர் சுச்சி கோல் அடித்தார். கடைசி வரை கவுகாத்தி அணியால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் முடிவில் சென்னை அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    சென்னையின் எப்.சி. அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். இதுவரை 4 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி பெற்று உள்ளது. கோவா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

    டெல்லியிடம் 1-3 என்ற கோல் கணக்கில் தோற்றது. சென்னை அணி கொல்கத்தாவுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. நேற்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பு சென்னை அணி புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்தது. நேற்று பெற்ற வெற்றி மூலம் நடப்பு சாம்பியனான சென்னை அணி 7 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியது.

    முதல் இடத்தில் கவுகாத்தி 10 புள்ளிகளுடன் (6 ஆட்டம்), 2-வது இடத்தில் மும்பை 8 புள்ளிகளுடன் (5 ஆட்டம்) உள்ளது. சென்னை அணி தனது அடுத்த ஆட்டத்தில் வருகிற 23-ந்தேதி புனேவுடன் மோதுகிறது.
    Next Story
    ×