search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக் கோப்பை கபடி: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி
    X

    உலகக் கோப்பை கபடி: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

    உலக கோப்பை கபடி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
    ஆமதாபாத்:

    3-வது உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. 2 முறை சாம்பியனான இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை இன்று எதிர்கொண்டது. இன்று இரவு 9 மணி அளவில் இந்த போட்டிகள் நடைபெற்றன.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இறுதியில் இந்திய அணி 69-18 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணிக்கு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    முன்னதாக இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் கென்யா அணி அமெரிக்காவை வீழ்த்தியது. நாளை நடைபெறும் தாய்லாந்து ஜப்பான் இடையிலான போட்டியின் முடிவினை பொறுத்து கென்யாவின் அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
    Next Story
    ×