என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக பெண்கள் டென்னிஸ்: செரீனா விலகல்
Byமாலை மலர்18 Oct 2016 4:04 AM GMT (Updated: 18 Oct 2016 4:04 AM GMT)
அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காயத்தால் உலக பெண்கள் டென்னிஸ் போட்டியில் இருந்தும் விலகி இருக்கிறார்.
‘டாப்-8’ வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சிங்கப்பூரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், 22 முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்றவருமான அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்று இருந்தார்.
தோள்பட்டை காயம் காரணமாக இந்த ஆண்டில் 8 போட்டியில் மட்டுமே கலந்து கொண்டதால் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை இழந்த 35 வயதான செரீனா வில்லியம்ஸ் காயத்தால் உலக பெண்கள் டென்னிஸ் போட்டியில் இருந்தும் விலகி இருக்கிறார்.
இது குறித்து செரீனா வில்லியம்ஸ் வெப்சைட்டுக்கு அளித்த பேட்டியில், ‘இந்த ஆண்டு எனக்கு மிகவும் கடினமானது. எனது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் குணமடையும் வரை ஓய்வு எடுக்கும் படி டாக்டர் அறிவுறுத்தி இருப்பதால் உலக போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், 22 முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்றவருமான அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்று இருந்தார்.
தோள்பட்டை காயம் காரணமாக இந்த ஆண்டில் 8 போட்டியில் மட்டுமே கலந்து கொண்டதால் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை இழந்த 35 வயதான செரீனா வில்லியம்ஸ் காயத்தால் உலக பெண்கள் டென்னிஸ் போட்டியில் இருந்தும் விலகி இருக்கிறார்.
இது குறித்து செரீனா வில்லியம்ஸ் வெப்சைட்டுக்கு அளித்த பேட்டியில், ‘இந்த ஆண்டு எனக்கு மிகவும் கடினமானது. எனது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் குணமடையும் வரை ஓய்வு எடுக்கும் படி டாக்டர் அறிவுறுத்தி இருப்பதால் உலக போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X