என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொல்கத்தா டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 316 ரன்னில் ஆல் அவுட்
Byமாலை மலர்1 Oct 2016 6:07 AM GMT (Updated: 1 Oct 2016 7:36 AM GMT)
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 316 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
கொல்கத்தா:
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி, எதிர்பார்த்த அளவுக்கு ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது. புஜாரா-ரகானே ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. புஜாரா 87 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரகானே 77 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த அஸ்வின் 33 பந்தில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்திருந்தது. சகா 14 ரன்னுடனும், ஜடேஜா ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய சகா, அரை சதம் கடந்தார். ஜடேஜா (14), புவனேஸ்வர் குமார் (5), ஷமி (14) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 316 ரன்களில் ஆல் அவுட் ஆனது. சகா 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
நியூசிலாந்து தரப்பில் ஹென்றி மூன்று விக்கெட்டுகள் எடுத்தார். டிரென்ட் போல்ட்,வாக்னர், ஜீத்தன் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி, எதிர்பார்த்த அளவுக்கு ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது. புஜாரா-ரகானே ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. புஜாரா 87 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரகானே 77 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த அஸ்வின் 33 பந்தில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்திருந்தது. சகா 14 ரன்னுடனும், ஜடேஜா ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய சகா, அரை சதம் கடந்தார். ஜடேஜா (14), புவனேஸ்வர் குமார் (5), ஷமி (14) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 316 ரன்களில் ஆல் அவுட் ஆனது. சகா 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
நியூசிலாந்து தரப்பில் ஹென்றி மூன்று விக்கெட்டுகள் எடுத்தார். டிரென்ட் போல்ட்,வாக்னர், ஜீத்தன் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X