என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸூக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்
Byமாலை மலர்30 Sep 2016 4:09 PM GMT (Updated: 30 Sep 2016 4:18 PM GMT)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் 285 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலி மற்றும் ஷர்ஜீல் கான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் பந்திலேயே அசார் அலி டக்அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து பாபர் அசாம் ஷர்ஜில் கான் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் பிரமாதமாக விளையாடினார்கள். ஷர்ஜில் கான் 43 பந்தில் 54 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். பாபர் அசாம் சதம் அடித்து 120 ரன்கள் சேர்த்தார்.
அதன்பின் வந்த விக்கெட் கீப்பர் சர்பிராஸ் கான் 35 ரன்னும், இமாத் வாசிம் 24 ரன்னும் சேர்க்க நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவரில் பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் குவித்தது. 45-வது ஓவரின்போது மின்சாரம் தடைபட்டதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆட்டம் தடைபட்டதால் ஆட்டம் 49 ஓவராக குறைக்கப்பட்டது.
பின்னர் 49 ஓவரில் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலி மற்றும் ஷர்ஜீல் கான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் பந்திலேயே அசார் அலி டக்அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து பாபர் அசாம் ஷர்ஜில் கான் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் பிரமாதமாக விளையாடினார்கள். ஷர்ஜில் கான் 43 பந்தில் 54 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். பாபர் அசாம் சதம் அடித்து 120 ரன்கள் சேர்த்தார்.
அதன்பின் வந்த விக்கெட் கீப்பர் சர்பிராஸ் கான் 35 ரன்னும், இமாத் வாசிம் 24 ரன்னும் சேர்க்க நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவரில் பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் குவித்தது. 45-வது ஓவரின்போது மின்சாரம் தடைபட்டதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆட்டம் தடைபட்டதால் ஆட்டம் 49 ஓவராக குறைக்கப்பட்டது.
பின்னர் 49 ஓவரில் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் விளையாடி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X