என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வூகான் ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்30 Sep 2016 12:37 PM GMT (Updated: 30 Sep 2016 12:37 PM GMT)
சீனாவில் நடைபெற்று வரும் வூகான் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ் உடன் இணைந்து விளையாடி வந்தார். சமீபத்தில் ஹிங்கிஸ் உடனான பார்ட்னர்ஷிப்பை முறித்துக் கொண்ட சானியா, செக் குடியரசின் பார்போரா ஸ்ட்ரைகோவா உடன் இணைந்து விளையாடி வருகிறார்.
இந்த ஜோடி தற்போது வூவான் ஒபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்று வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஒன்றில் கஜகஜஸ்தானின் ஷ்வெடோவா - ஹங்கேரியின் டிமேயா பாபோஸ் ஜோடியை சானியா ஜோடி எதிர்கொண்டது.
பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் இடத்தில் இருக்கும் சானியா ஜோடி, இந்த ஆட்டத்தில் எதிர் ஜோடியை முதல் செட்டில் 6-3 என எளிதில் வீழ்த்தியது. ஆனால், 2-வது செட்டில் கஜகஜஸ்தான்- ஹங்கேரி ஜோடி சானியா ஜோடிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் சானியா ஜோடி 7(7) - 6(5) என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த ஜோடி தற்போது வூவான் ஒபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்று வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஒன்றில் கஜகஜஸ்தானின் ஷ்வெடோவா - ஹங்கேரியின் டிமேயா பாபோஸ் ஜோடியை சானியா ஜோடி எதிர்கொண்டது.
பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் இடத்தில் இருக்கும் சானியா ஜோடி, இந்த ஆட்டத்தில் எதிர் ஜோடியை முதல் செட்டில் 6-3 என எளிதில் வீழ்த்தியது. ஆனால், 2-வது செட்டில் கஜகஜஸ்தான்- ஹங்கேரி ஜோடி சானியா ஜோடிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் சானியா ஜோடி 7(7) - 6(5) என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X