search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடியோ: மகளைத் தொலைத்து பதறிய தாய்; ஆட்டத்தை நிறுத்தி உதவிய நடால்
    X

    வீடியோ: மகளைத் தொலைத்து பதறிய தாய்; ஆட்டத்தை நிறுத்தி உதவிய நடால்

    டென்னிஸ் போட்டியின்போது மகளை தொலைத்த தாய் அலறியபடி தேடிக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த நடால் ஆட்டத்தை உடனடியாக நிறுத்தி உதவினார்.
    டென்னிஸ் போட்டியின்போது மகளை தொலைத்த தாய் அலறியபடி தேடிக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த நடால் ஆட்டத்தை உடனடியாக நிறுத்தி உதவினார்.

    ஸ்பெயின் நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரர் ரபெல் நடால். களிமண் தரையின் மன்னன் என்று அழைக்கப்படும் இவர், டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தார். இந்த ஆட்டத்தை 7 ஆயிரம் பேர் பார்த்துக் கொண்டிருந்தனர். டென்னிஸ் ஜாம்பவான்கள் கார்லஸ் மோயா மற்றும் ஜான் மெக்என்ரோய் ஆகியோரும் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

    திடீரென ரசிகர்களின் கூட்டத்திற்குள் சலசலப்பு ஏற்பட்டது. பெண்மணி ஒருவர் தனது குழந்தையை தொலைத்து விட்டு பதறிக்கொண்டிருந்தார். ரசிகர்கள் அமர்ந்திருக்கும் கேலரியில் அழுதபடியே குழந்தையை அங்கும்இங்குமாக தேடிக் கொண்டிருந்தார். தற்செயலாக நடால் இந்த சம்பவத்தை கவனித்தார். உடனே, நடால் தனது ஆட்டத்தை நிறுத்தினார்.

    பின்னர், அந்த பெண்மணியின் மீது அனைவருடைய பார்வையும் பட்டது. இதனால் அந்த பெண்மணி உடனடியாக தனது குழந்தையை கண்டுபிடித்தார். குழந்தையை கண்டுபிடித்த சந்தோசத்தில் பெண்மணி அவரை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்டு, கூட்டத்திற்குள் நுழைந்து வெளியேறினார். அத்துடன் நன்றி உணர்ச்சியுடன் நடாலை நோக்கி கைகாட்டி தனது நன்றியை தெரிவித்தார்.

    நடாலின் இந்த மனித நேயமிக்க செயலால் அனைவரது பாராட்டையும் பெற்றார்.
    Next Story
    ×