என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது வங்காளதேசம்
Byமாலை மலர்29 Sep 2016 2:42 AM GMT (Updated: 29 Sep 2016 2:42 AM GMT)
ஆப்கானிஸ்தான் அணி வங்காளதேச அணியை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை மறுதினம் நடக்கிறது.
மிர்புர் :
வங்காளதேசத்துக்கு சென்றுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் 2-வது ஆட்டம் மிர்புரில் நேற்று நடந்தது.
முதலில் பேட் செய்த வங்காளதேசம் 49.2 ஓவர்களில் 208 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அறிமுக வீரர் மோசடெக் ஹூசைன் 45 ரன்களும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), முஷ்பிகுர் ரஹிம் 38 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாத்தில் திரில் வெற்றியை பெற்றதுடன், தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தது.
கேப்டன் அஸ்கார் ஸ்டானிக்ஜாய் 57 ரன்களும், முகமது நபி 49 ரன்களும் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தனர். தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை மறுதினம் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X