என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காம்பீர் மீண்டும் அணிக்குள் வர வாய்ப்பளித்த கும்ப்ளே
Byமாலை மலர்28 Sep 2016 2:48 PM GMT (Updated: 28 Sep 2016 2:48 PM GMT)
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கவுதம் காம்பீர் விளையாட உள்ள நிலையில், அணிக்குள் மீண்டும் விளையாடுவதற்கான இந்த வாய்ப்பை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே வழங்கியுள்ளார்.
புதுடெல்லி:
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் 197 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 30-ந்தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கவுதம் காம்பீர் இடம் பெற்றுள்ளார். தொடக்க வீரர் ராகுல் காயம் அடைந்துள்ளதால் அவருக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது.
34 வயதான கவுதம் காம்பீர் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார். கடைசியாக 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்டில் விளையாடினார்.
தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பினை கவுதம் காம்பீருக்கு பயிற்சியாளர் அனில் கும்ப்ளே வழங்கியுள்ளார்.
இதுபற்றி கும்ப்ளே செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கவுதம் காம்பீர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது நல்ல விஷயம் என்று நினைக்கிறேன். உள்நாட்டு மைதானங்களில் காம்பீர் சிறப்பாக விளையாடி இருக்கிறார். தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேரில் யாரையும் வெளியே இருக்க வைக்க விரும்பவில்லை’ என்றார்.
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் 197 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 30-ந்தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கவுதம் காம்பீர் இடம் பெற்றுள்ளார். தொடக்க வீரர் ராகுல் காயம் அடைந்துள்ளதால் அவருக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது.
34 வயதான கவுதம் காம்பீர் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார். கடைசியாக 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்டில் விளையாடினார்.
தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பினை கவுதம் காம்பீருக்கு பயிற்சியாளர் அனில் கும்ப்ளே வழங்கியுள்ளார்.
இதுபற்றி கும்ப்ளே செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கவுதம் காம்பீர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது நல்ல விஷயம் என்று நினைக்கிறேன். உள்நாட்டு மைதானங்களில் காம்பீர் சிறப்பாக விளையாடி இருக்கிறார். தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேரில் யாரையும் வெளியே இருக்க வைக்க விரும்பவில்லை’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X