search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காம்பீர் மீண்டும் அணிக்குள் வர வாய்ப்பளித்த கும்ப்ளே
    X

    காம்பீர் மீண்டும் அணிக்குள் வர வாய்ப்பளித்த கும்ப்ளே

    நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கவுதம் காம்பீர் விளையாட உள்ள நிலையில், அணிக்குள் மீண்டும் விளையாடுவதற்கான இந்த வாய்ப்பை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே வழங்கியுள்ளார்.
    புதுடெல்லி:

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் 197 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 30-ந்தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கவுதம் காம்பீர் இடம் பெற்றுள்ளார். தொடக்க வீரர் ராகுல் காயம் அடைந்துள்ளதால் அவருக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது.

    34 வயதான கவுதம் காம்பீர் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார். கடைசியாக 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்டில் விளையாடினார்.

    தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பினை கவுதம் காம்பீருக்கு பயிற்சியாளர் அனில் கும்ப்ளே வழங்கியுள்ளார்.

    இதுபற்றி கும்ப்ளே செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கவுதம் காம்பீர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது நல்ல விஷயம் என்று நினைக்கிறேன். உள்நாட்டு மைதானங்களில் காம்பீர் சிறப்பாக விளையாடி இருக்கிறார். தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேரில் யாரையும் வெளியே இருக்க வைக்க விரும்பவில்லை’ என்றார்.
    Next Story
    ×