search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அக்டோபர் இறுதிக்குள் போட்டிக்கு திரும்புவேன்: சாய்னா நேவால் நம்பிக்கை
    X

    அக்டோபர் இறுதிக்குள் போட்டிக்கு திரும்புவேன்: சாய்னா நேவால் நம்பிக்கை

    காயம் காரணமாக ஓய்வு எடுத்து வந்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், அக்டோபர் இறுதிக்குள் போட்டிக்கு திரும்புவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    ஐதராபாத்:

    ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தொடக்க சுற்றுடன் அதிர்ச்சிகரமாக வெளியேறிய இந்திய வீராங்கனை சாய்னா நேவால், வலது கால் மூட்டு காயத்தால் பாதிக்கப்பட்டார். முட்டுப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டதால் தன்னால் இயல்பாக விளையாட முடியாமல் போனதாக சாய்னா வேதனையுடன் கூறினார்.

    இந்த நிலையில் சாய்னா ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். காயத்தால் அவதிப்பட்ட அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

    இதனால், அடுத்த 4 மாதங்களுக்கு சாய்னா நேவால் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில், காயம் காரணமாக ஒய்வு எடுத்து வந்த பேட்மிண்டன் சாய்னா நேவால், அக்டோபர் இறுதிக்குள் போட்டிக்கு திரும்புவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

    அக்டோபர் இறுதி வரை முழுமையாக குணமடைய வாய்ப்பில்லை. அதனால், அதுவரையிலான போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. தற்போது நான் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ளேன். இந்த இடம் மேலும் சரியலாம்.

    குணமடைந்து விட்டால் நவம்பர் மாதங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். நன்றாக உள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று வருகிறேன்.

    இவ்வாறு சாய்னா தெரிவித்தார்.
    Next Story
    ×