என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
20 ஓவர் போட்டி: பாகிஸ்தான் ஹாட்ரிக் வெற்றி - வெஸ்ட்இண்டீஸ் ஒயிட்வாஷ்
Byமாலை மலர்28 Sep 2016 5:24 AM GMT (Updated: 28 Sep 2016 5:24 AM GMT)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
அபுதாபி:
பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஸ் அகமது வெஸ்ட் இண்டீஸ் அணியை முதலில் விளையாட அழைத்தார்.
அந்த அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்னே எடுக்க முடிந்தது. சாமுவேல்ஸ் அதிகபட்சமாக 59 பந்தில் 42 ரன் (3 பவுண்டரி) எடுத்தார். இமாத் ஹாசிம் 21 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சோயிப் மாலிக் 34 பந்தில் 43 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) பாபர் ஆசம் 27 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் பெற்ற ஹாட்ரிக் வெற்றியாகும். இதன்மூலம் அந்த அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது. துபாயில் நடந்த முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 16 ரன் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று இருந்தது.
உலக சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணியால் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் 3 ஆட்டத்திலும் தோற்றது பரிதாபமே.
அடுத்து இரு அணிகள் இடையே 3 ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற 30-ந்தேதி சார்ஜாவில் நடக்கிறது.
பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஸ் அகமது வெஸ்ட் இண்டீஸ் அணியை முதலில் விளையாட அழைத்தார்.
அந்த அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்னே எடுக்க முடிந்தது. சாமுவேல்ஸ் அதிகபட்சமாக 59 பந்தில் 42 ரன் (3 பவுண்டரி) எடுத்தார். இமாத் ஹாசிம் 21 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சோயிப் மாலிக் 34 பந்தில் 43 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) பாபர் ஆசம் 27 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் பெற்ற ஹாட்ரிக் வெற்றியாகும். இதன்மூலம் அந்த அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது. துபாயில் நடந்த முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 16 ரன் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று இருந்தது.
உலக சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணியால் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் 3 ஆட்டத்திலும் தோற்றது பரிதாபமே.
அடுத்து இரு அணிகள் இடையே 3 ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற 30-ந்தேதி சார்ஜாவில் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X