என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிரிக்கெட் ஜாம்பவானாக உருவெடுப்பார் அஸ்வின்: கவாஸ்கர் கணிப்பு
Byமாலை மலர்28 Sep 2016 4:10 AM GMT (Updated: 28 Sep 2016 4:10 AM GMT)
கிரிக்கெட் ஜாம்பவான் என்ற அந்தஸ்தை நோக்கி இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வேகமாக பயணித்து வருவதாக முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி :
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
கிரிக்கெட் ஜாம்பவான் என்ற அந்தஸ்தை நோக்கி இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வேகமாக பயணித்து வருகிறார். அவர் ஏற்கனவே சிறந்த கிரிக்கெட் வீரராகவும், சிறந்த பந்து வீச்சாளராகவும் தன்னை நிரூபித்து இருக்கிறார்.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இதே மாதிரி தொடர்ந்து அசத்தினால், தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கையில் ஜாம்பவானாக உருவெடுப்பார். கிரிக்கெட் ஆட்டத்தை ஒரு மாணவன் போல் அஸ்வின் ஆர்வமாக கற்று வருகிறார்.
இதனால் அவர் ஒவ்வொரு நாள் ஆட்டத்திலும் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார். போட்டியை விட்டு விலகும் போது அவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முத்திரை பதித்து இருப்பார்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X