search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘அஸ்வின் விலைமதிப்புமிக்க கிரிக்கெட் வீரர்’ கேப்டன் விராட்கோலி புகழாரம்
    X

    ‘அஸ்வின் விலைமதிப்புமிக்க கிரிக்கெட் வீரர்’ கேப்டன் விராட்கோலி புகழாரம்

    ‘இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விலைமதிப்புமிக்க கிரிக்கெட் வீரர்’ என்று கேப்டன் விராட்கோலி புகழாரம் சூட்டினார்.
    கான்பூர்:

    ‘இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விலைமதிப்புமிக்க கிரிக்கெட் வீரர்’ என்று கேப்டன் விராட்கோலி புகழாரம் சூட்டினார்.

    நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

    இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், முதல் இன்னிங்சில் 40 ரன்னும் சேர்த்தார். வெற்றிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், 

    இந்திய அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் அஸ்வின். உலக கிரிக்கெட் அரங்கில் தாக்கம் ஏற்படுத்தும் வீரர்கள் வரிசையில் அவர் முதல் 4 இடங்களுக்குள் எளிதாக வருவார். ஒவ்வொரு அணியிலும் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வீரர்கள் இருப்பார்கள். அந்த வகையில் இந்திய அணியில் பந்து வீச்சில் முக்கிய இடம் பிடித்து இருப்பவர் அஸ்வின். இந்த டெஸ்ட் வெற்றியில் அவரது பங்கு முக்கியமானது. கடந்த சில வருடங்களாக அஸ்வின் அருமையாக பந்து வீசி வருகிறார். அவர் தனது ஆட்டத்துக்காக கடுமையாக உழைத்து வருகிறார். 

    ஆட்டம் குறித்து அதிகம் சிந்திக்கக்கூடிய அவர் ஆட்டத்தின் தன்மையை எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவர்.

    பந்து வீச்சுடன் அஸ்வினின் பேட்டிங்கும் சிறப்பாக உள்ளது. ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து அதற்கு தகுந்தபடி செயல்படுபவர். இந்திய டெஸ்ட் அணியின் விலைமதிப்புமிக்க கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆவார். ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சும் நன்றாக இருந்தது. இருவரும் இணைந்து எதிரணிக்கு நல்ல நெருக்கடியை அளித்தனர். எங்கள் அணியில் பின்கள வீரர்கள் உள்பட அனைவரும் நல்ல பங்களிப்பை அளித்தனர். இது மறக்க முடியாத டெஸ்ட் போட்டியாகும். நியூசிலாந்து அணியினர் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

    ஆட்டம் கடைசி நாள் வரை நீடித்ததற்கு நியூசிலாந்து அணியினரின் மன உறுதியே காரணமாகும் என்றார்.
    Next Story
    ×