என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வங்காளதேச வீரர் என்ற பெருமையை பெற்றார் சாஹிப் அல் ஹசன்
Byமாலை மலர்26 Sep 2016 1:46 PM GMT (Updated: 26 Sep 2016 1:46 PM GMT)
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 207 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வங்காளதேச வீரர் என்ற பெருமையை சாஹிப் அல் ஹசன் பெற்றார்.
வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டராக திகழ்ந்து வருபவர் சாஹிப் அல் ஹசன். கடந்த 2006-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான இவர், நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
முதல் விக்கெட்டாக ஷபிர் நூரியை எல்.பி.டபிள்யூ. மூலம் வீழ்த்தினார். இதன்மூலம் 206 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வங்காள தேச வீரர் என்ற பெருமையை பெற்றிருந்த அப்துர் ரஸாக் சாதனையை சமன் செய்தார். அதன்பின் ரஹ்மாத் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் 207 விக்கெட்டுக்கள் வீழ்த்திய சாகிப், அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வங்காள தேச வீரர் என்ற சாதனை படைத்தார்.
இதுபற்றி சாகிப் கூறுகையில், “அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற செய்தி சிறந்த உணர்வைத் தருகிறது. ஆனால், அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மேலும், எனக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு அதிகமாக கிடைக்க வில்லை” என்று நகைக்சுவையாக குறிப்பிட்டார்.
முதல் விக்கெட்டாக ஷபிர் நூரியை எல்.பி.டபிள்யூ. மூலம் வீழ்த்தினார். இதன்மூலம் 206 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வங்காள தேச வீரர் என்ற பெருமையை பெற்றிருந்த அப்துர் ரஸாக் சாதனையை சமன் செய்தார். அதன்பின் ரஹ்மாத் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் 207 விக்கெட்டுக்கள் வீழ்த்திய சாகிப், அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வங்காள தேச வீரர் என்ற சாதனை படைத்தார்.
இதுபற்றி சாகிப் கூறுகையில், “அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற செய்தி சிறந்த உணர்வைத் தருகிறது. ஆனால், அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மேலும், எனக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு அதிகமாக கிடைக்க வில்லை” என்று நகைக்சுவையாக குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X