என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கண்டனம்
Byமாலை மலர்25 Sep 2016 6:15 AM GMT (Updated: 25 Sep 2016 6:15 AM GMT)
தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து பாகிஸ்தான் ஈடுபடுவதால் அந்நாட்டுடன் கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாக்கூர் கூறிய கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்
கராச்சி:
காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற வாய்ப்பே இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்து இருந்தார்.
தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து பாகிஸ்தான் ஈடுபடுவதால் அந்நாட்டுடன் கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அவர் கூறி இருந்தார்.
அனுராக் தாக்கூரின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறியதாவது:-
அனுராக் தாக்கூரின் அறிக்கையில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஏனென்றால் பாகிஸ்தானுடன் விளையாட விரும்பவில்லை என்பதை இந்தியா ஏற்கனவே முடிவு எடுத்து விட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்பு வைத்து இருப்பதுதான் கவலை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் சுழற்பந்து வீரர் அப்துல் காதிர் கூறியதாவது:-
பாகிஸ்தான் கிரிக்கெட் எப்போதுமே அரசியலை விட்டு விலகி நிற்கிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியலுடன் தான் இருக்கிறது.
பாகிஸ்தானுடன் பல ஆண்டுகளாக இந்தியா நேரடி தொடரில் விளையாடவில்லை. இதனால் அனுராக்தாக்கூரின் அறிக்கைக்கு என்ன மதிப்பு இருக்கிறது. ஐ.சி.சி. போட்டிகளில் இந்தியாவுடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்வது பற்றி பாகிஸ்தான் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற வாய்ப்பே இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்து இருந்தார்.
தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து பாகிஸ்தான் ஈடுபடுவதால் அந்நாட்டுடன் கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அவர் கூறி இருந்தார்.
அனுராக் தாக்கூரின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறியதாவது:-
அனுராக் தாக்கூரின் அறிக்கையில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஏனென்றால் பாகிஸ்தானுடன் விளையாட விரும்பவில்லை என்பதை இந்தியா ஏற்கனவே முடிவு எடுத்து விட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்பு வைத்து இருப்பதுதான் கவலை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் சுழற்பந்து வீரர் அப்துல் காதிர் கூறியதாவது:-
பாகிஸ்தான் கிரிக்கெட் எப்போதுமே அரசியலை விட்டு விலகி நிற்கிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியலுடன் தான் இருக்கிறது.
பாகிஸ்தானுடன் பல ஆண்டுகளாக இந்தியா நேரடி தொடரில் விளையாடவில்லை. இதனால் அனுராக்தாக்கூரின் அறிக்கைக்கு என்ன மதிப்பு இருக்கிறது. ஐ.சி.சி. போட்டிகளில் இந்தியாவுடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்வது பற்றி பாகிஸ்தான் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X