என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது 20 ஓவர் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் தோல்வி - பாகிஸ்தான் தொடரை வென்றது
Byமாலை மலர்25 Sep 2016 4:17 AM GMT (Updated: 25 Sep 2016 4:17 AM GMT)
பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டியில் தொடரை பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
துபாய்:
பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி துபாயில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது. கேப்டன் சர்பிராஸ் அகமது 32 பந்தில் 46 ரன்னும் (5 பவுண்டரி), தொடக்க வீரர் காலித் லத்தீப் 36 பந்தில் 40 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), சோயிப்மாலிக் 28 பந்தில் 37 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்னே எடுக்க முடிந்தது.
இதனால் பாகிஸ்தான் 16 ரன்னில் வெற்றி பெற்றது. சுனில் நரீன் அதிகபட்சமாக 17 பந்தில் 30 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), பிளட்சர்ன் 29 ரன்னும் எடுத்தனர். சோகைல் தன்வீர், ஹசன் அலி தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் தோல்வியை தழுவியது. நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் அந்த அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது. இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி வருகிற 27-ந்தேதி அபுதாபியில் நடக்கிறது.
பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி துபாயில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது. கேப்டன் சர்பிராஸ் அகமது 32 பந்தில் 46 ரன்னும் (5 பவுண்டரி), தொடக்க வீரர் காலித் லத்தீப் 36 பந்தில் 40 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), சோயிப்மாலிக் 28 பந்தில் 37 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்னே எடுக்க முடிந்தது.
இதனால் பாகிஸ்தான் 16 ரன்னில் வெற்றி பெற்றது. சுனில் நரீன் அதிகபட்சமாக 17 பந்தில் 30 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), பிளட்சர்ன் 29 ரன்னும் எடுத்தனர். சோகைல் தன்வீர், ஹசன் அலி தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் தோல்வியை தழுவியது. நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் அந்த அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது. இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி வருகிற 27-ந்தேதி அபுதாபியில் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X