search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கான்பூர் டெஸ்டில் வலுவான நிலையில் இந்தியா: 3-வது நாள் ஆட்ட முடிவில் 2-வது இன்னிங்சில் 159/1
    X

    கான்பூர் டெஸ்டில் வலுவான நிலையில் இந்தியா: 3-வது நாள் ஆட்ட முடிவில் 2-வது இன்னிங்சில் 159/1

    கான்பூர் டெஸ்டில் இந்தியா வலுவான நிலையை எட்டியுள்ளது. 3-வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்தை விட 215 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
    இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 318 ரன்கள் குவித்தது. பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணி அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் அபார பந்து வீச்சால் 262 ரன்னில் சுருண்டது. ஜடேஜா ஐந்து விக்கெட்டும், அஸ்வின் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். முதல் இன்னிங்சில் நியூசிலாந்தை விட இந்தியா 56 ரன்கள் முன்னிலைபெற்றிருந்தது.

    அந்த ரன்னுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது இந்தியா. தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், முரளி விஜய் களம் இறங்கினார்கள்.

    லோகேஷ் ராகுல் அதிரடியாக விளையாட முரளி விஜய் நிதான ஆட்டத்தை கடைபிடித்தார். 3-வது நாள் தேனீர் இடைவேளைக்கு முன் ராகுல் 38 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இவர் முரளி விஜய் உடன் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தார்.

    அதன்பின் முரளி விஜய் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். 2.2 ஓவரில் 30 ரன்கள் சேர்த்தனர். பின்னர் விக்கெட்டை காப்பாற்றும் வகையில் நிதான ஆட்டத்தை கடைபிடித்தார்கள். அணியின் ஸ்கோர் 115 ரன்னாக இருக்கும்போது முரளி விஜய் அரைசதம் அடித்தார்.

    மறுமுனையில் விளையாடிய புஜாரா இன்றைய 3-வது நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரின் 3-வது பந்தில் ஒரு ரன் அடித்தன் மூலம் அரைசதம் அடித்தார். 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்துள்ளது. முரளி விஜய் 64 ரன்னுடனும், புஜாரா 50 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    தற்போது வரை இந்தியா 215 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் கைவசம் 9 விக்கெட்டுக்கள் உள்ளது. இரண்டு நாட்கள் மீதமுள்ளதால் நாளை தேனீர் இடைவேளை வரை இந்தியா விளையாடி 400 ரன்களுக்கு மேல் நியூசிலாந்தின் வெற்றிக்கு இலக்கு நிர்ணயித்தால் இந்தியா இந்த டெஸ்டில் எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
    Next Story
    ×